Sunday, December 5, 2010

நண்பனின் காதலி!


என்ன மாப்பிள்ள! தோரனைலாம் தூள் பறக்குது... புது ஜீன்ஸ், ஷூ, கூலிங் கிளாஸ்... கலக்குற!

இது என்னோட கேர்ள் பிரண்டு எனக்கு ஆசையா வாங்கிக் கொடுத்ததுடா.....

Saturday, December 4, 2010

கமலும், எஸ்.பி.பியும் பின்னே ராஜாவும்!

கமலஹாசனோட பிறந்த நாளில் SPB ஒரு இசைக்குழுவுடன் இணைந்து "கமல்" பாடல்களை மட்டும் பாடி ஒரு கான்சர்ட் நடந்தது. அப்பவே ராஜாவின் இசையில் இவர்கள் இணைந்த பாடல்களை ஒரு தொகுப்பா போடணும்னு நெனச்சேன்.நடுவில கொஞ்சம் பிசியானதால் அது அப்படியே விட்டு போச்சு. ஆனா சமீபத்தில கொடைக்கானல் போகும் போது, கொடை ரோட்டுல இருந்து ஹோட்டல் போற வரைக்கும் அப்படியே நான் உருகி போய்ட்டேன்....

Sunday, November 28, 2010

நந்தலாலா - அன்பின் பயணம்!

நந்தலாலா - ஒரு மனப்பிறழ்வு கொண்டவனும், ஒரு சிறுவனும், தத்தம் தாயைத் தேடி செல்லும் வழியில் சந்திக்கும் மனிதர்களும் அங்கு நடக்கும் சம்பவங்களும் தான் கதை. அவர்களின் நோக்கம் நிறைவேறியதா இல்லையா என்பதை தயவு செய்து திரை அரங்கில் சென்று பார்க்கவும். அதுவே இந்த மாதிரி நல்ல படத்திற்கு நாம் செய்யும் மரியாதை.

Saturday, November 27, 2010

சரவெடி & அதிரடி - 27/11/2010

சரியா சொல்லனும்னா கிட்டத்தட்ட 15 நாளைக்கு அப்புறம் இப்பதான் வலைக்கு வர நேரம் கிடைச்சது. போன வாரம் கொடைக்கானல், அதுக்கு முந்தின வாரம் பாபனாசம்னு ஊரு சுத்தினதில கணினி முன்னாடி உக்கார நேரமே இல்லை.அலுவலகத்தில இருந்தாலும் பிளாக் எல்லாம் தடை செஞ்சிருக்காங்க.... இனிமே ரெகுலரா வந்திருவோம்.... இதனால எல்லாருக்கும் சொல்றது என்னன்னா "i am back"

Thursday, November 11, 2010

வ - குவாட்டர் கட்டிங்!!!


திரும்ப திரும்ப அரைச்சு புளிச்சு பூசனம் பூத்து போனாலும் விடாம அதே மாவை தோசையா ஊத்துரவங்களுக்கு மத்தியில இப்படி ஒரு வித்தியாசமான படத்தை கொடுத்ததற்கு இயக்குனர்கள் புஷ்கர் - காயத்ரிக்கும், தயாரிப்பாளர்களுக்கும், வெளியிட்ட தயாநிதி அழகிரிக்கும் வாழ்த்துக்கள்.

Sunday, November 7, 2010

மைனா - திரை விமர்சனம்!!!


கமல், விக்ரம் போன்ற பிரபலங்கள் மற்றும் இன்ன பிற ஊடகங்கள் என எல்லாரும் பாராட்டு பத்திரம் வாசித்த படம் இது. அது போக படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆன உதயநிதி தன்னுடைய பேனரில் ரிலீஸ் செய்தது என எதிர்பார்ப்பை எகிற வைத்த படம் இந்த மைனா.... தீபாவளி அன்றே போக வேண்டும் என்று நினைத்து முடியாமல் நேற்று இரவுக் காட்சிக்கு நம்ம ஏவிஎம் அரங்கில் சென்று பார்த்தேன்.

Tuesday, November 2, 2010

யாரிந்த பெண்தான் என்று கேட்டேன்!!!



புதிதாய் பூத்த ரோஜாவுக்கு முத்தம் கொடுத்தாய்
ரோஜா செடி முட்களை உதிர்த்துக் கொண்டது

Saturday, October 30, 2010

துபாய் காசும்! துன்பியலும்!!



"என்னப்போ! சொவமா இருக்கியா! எம்புட்டு வருஷமாச்சி உன்னை பாத்து....இப்பதான் வரியா! பிரயாணம் எல்லாம் சவுரியமா இருந்துச்சா!" என்றார் ஊர்ப் பெரியவர் சுடலை.

"எல்லாம் சவுரியம்தான் அய்யா! நீங்க எப்படி இருக்கீக... விவசாயமெல்லாம் எப்படி போகுது?" என்றேன்.

Monday, October 25, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -3 !!!

மாஞ்சோலை பாகம் 1 & பாகம் 2 படிக்க இங்கே கிளிக்கவும்!

கடைசியாக குதிரை வெட்டிக்கு வந்து சேர்ந்தோம். அடிக்கின்ற குளிரில் கை கால்களெல்லாம் விறைத்தது! அங்கே வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய தங்கும் இடம் ஒன்று உள்ளது, ஆனால் நாங்கள் உடனே திரும்ப வேண்டியதிருந்ததால் அந்த எண்ணத்தை எச்சில் தொட்டு அழித்தோம்.காட்டு பன்றிகள் அந்த நேரத்திலேயே மிக சாதாரணமாக அலைந்து கொண்டிருந்தது... சில பெரிய பன்றிகளின் பற்கள் நன்றாக வெளியே வந்து கொம்பு போல காட்சியளித்தது பார்க்க மிக பயங்கரமாக இருந்தது.

Sunday, October 24, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் -2 !!!

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம் முதல் பதிவின் சுட்டி இது.. முதல் பாகம் வாசிக்காதவர்கள் அதை கண்டு விட்டு தொடரவும்....

இயற்கையை ரசித்துக் கொண்டே நாங்கள் பயணித்த தவேரா மெதுவா முன்னேறியது... குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கவே இடையிடையே இயற்கையின் அவசரத்திற்க்கும் சில இடங்களின் அழகை ரசிக்கவும் நிறுத்தி நிறுத்தி சென்றோம்.

Sunday, October 17, 2010

மாஞ்சோலை - ஒரு சுகானுபவம்!!!

திருநெல்வேலில பிறந்து வளர்ந்த நானே, சரியா சொல்லனும்னா மூணு தடவைதான் மாஞ்சோலைக்கு போயிருப்பேன்...ஆனா ஒவ்வொரு முறை அங்கே போகும்போதும் ஏதோ புதுசா ஒரு அனுபவம் கிடைச்ச மாதிரி மனசெல்லாம் துள்ளும்.... கடைசியா நான் அங்கே போனது ஒரு ஆறு மாசத்துக்கு மேலேயே இருக்கும்.... நண்பர் ஒருவர் திருமணத்துக்கு ஊருக்கு போயிருந்தப்போ அப்படியே விடுறா வண்டியைனு ஜூட்... 

Friday, October 15, 2010

திருநெல்வேலி சீமையிலே -3! காரையார் & பாணதீர்த்த அருவி !!!

போன பதிவுகள்லே பாபநாசம் மற்றும் அகத்தியர் அருவி பற்றி பார்த்தோம். இப்போ காரையார் அணையை பாக்கலாம். பாபநாசத்திலே இருந்து, 12 கிலோமீட்டர் மேலே மலையிலே போனா, உங்க கண்ணுக்கு குளிர்ச்சியா ஒரு அணைக்கட்டு பாக்கலாம்...அந்த அணையோட பேரு காரையார் அணை!

Thursday, October 7, 2010

பாலுணர்வும்! வாளுணர்வும்!! - இருவர்!!!

காலையில் வீட்டுல சும்மா பாட்டு கேட்டுகிட்டு இருக்கும் போது இருவர் பாடல்கள் ஒலித்தது! அதிலே உள்ள அந்த இரண்டு பாடல்கள்... அதை பாடல்கள்னு சொல்லாம நல்ல கவிதையா கேட்டுப் பாத்தாலோ இல்லை படிச்சு பாத்தாலோ....சத்தியமா சொல்றேன் எனக்கு அப்படியே புல்லரித்தது! இததனைக்கும் ரெண்டும் வேற வேற உணர்வுகள்; வேற வேற கருத்துக்கள்... ஆனா அதை கேக்கும்போது வர்ற உணர்வு என்னவோ ஒரு சிலிர்ப்பு...

Saturday, October 2, 2010

இளையராஜாவின் துள்ளிசை பாடல்கள் - எனக்கு பிடித்தவை!!!

 சின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற "கண்ணன் ஒரு கைக்குழந்தை" பாட்டைத்தான் போடுவாங்களாம். அந்த பாட்டை கேட்டா  அழுகைய நிறுத்திட்டு  சிரிக்க ஆரம்பிச்சிருவேனாம். எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்னா, நாங்களாம் அப்போ இருந்தே இளையராஜா ரசிகன்னு சொல்லத்தான்... சமீபத்திலே கோடம்பாக்கத்திலே இருக்கிற "சினி சிட்டி" ஹோட்டலுக்கு போயிருந்தோம்அங்கே வார நாட்களில் அதாவது திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் கரோக்கி நைட்ஸ்! அப்போ சும்மா ஜாலிக்கு ஒரு சில பாடல்களை பாடினேன்.. முக்கியமா இளையராஜாவோட 80 -90 களில் வந்த பாடல்கள்... அந்த மாதிரி பாடல்களை பற்றி ஒரு பதிவு எழுதலாமேன்னு அப்போதான் யோசிச்சேன் ( அந்த ஹோட்டல் நாசமா போக!னு பல பேரு மனசுக்குள்ளே சொல்றது எனக்கு தெளிவா கேக்குது!)

Monday, September 27, 2010

திருநெல்வேலி சீமையிலே -2! அகஸ்தியர் அருவி!!!

பாபநாசம் பற்றிய தகவல்களை போன பதிவுல பார்த்தோம். பாபநாசத்தில் இருந்து ஒரு நாலு கிலோ மீட்டர் மலை மேலே போனா வர்ற இடம் அகஸ்தியர் அருவி. அகஸ்தியர் அருவிக்கு கொஞ்சம் முன்னாடி ஒரு கிளைப்பாதை மேலே போகும்... அந்த படிக்கட்டுல நாம ஏரி போனோம்னா நம்ம போயி சேருற இடம் கல்யாண தீர்த்தம். இந்த இரண்டு இடங்களிலும் நாங்க பண்ணாத அட்டகாசம் கிடையாது.

Friday, September 24, 2010

திருநெல்வேலி சீமையிலே -1! பாபநாசம்!!!

வேளைக்கு சோறும் , சொந்த மண்ணில் ஒரு வீடும், சுத்தி நம்ம ஜனங்களும் இருந்தா அதை விட சொர்க்கம் மனுஷனுக்கு என்ன வேணும்! ஹ்ம்ம்.... இதை அயல் நாட்டுலே இருக்கிற நண்பர்கள் மட்டும் இல்லை... என்னை மாதிரி எப்பவாது விடுமுறைல மட்டும் ஊருக்கு போக சநதர்ப்பம் இருக்கிறவங்க கூட சொல்லுவாங்க...

Monday, September 20, 2010

துரோகி - ஒரு பார்வை!


 தமிழில் பெண் இயக்குனர்களிடம் இருந்து எப்போதுமே மெல்லிய காதல் அல்லது ஒரு நகைச்சுவை கலந்த குடும்ப படங்களை மட்டுமே எதிர்பார்க்க முடியும். ஆனால் சுதா.கே.பிரசாத் முற்றிலும் மாறுபட்டு ஒரு தாதாயிசம், துரோகம் கலந்த வட சென்னை கதையை கையில் எடுத்திருக்கிறார்.அதற்க்கு முதலில் பாராட்டுக்கள்.

Friday, September 17, 2010

சிக்கன் பக்கோடாவும்! சிக்குன்னு ஒரு பொண்ணும்!!



"விநாயகனே வினை தீர்ப்பவனே"னு உச்சஸ்தாயில் தள்ளி இருக்கிற  கோயிலில் மைக் செட் அலறிக் கொண்டிருந்தது. வேலை முடிந்து கேசம் கலைந்த தலையுடன் முகத்தில் களைப்புடன் சில பெண்கள் நேத்து பாத்த சீரியல் பத்தி ரொம்ப தீவிராமக ஏதோ பேசிக்கொண்டு சென்றார்கள். பழைய லுங்கியை மடித்து கட்டி, பீடி ஒன்றை பற்ற வைத்தான் முருகேசன். வாங்கும் போது குருடாக இருந்த அவன் முண்டா பனியனில் இப்போது ஆயிரம் கண்கள்!  நரை முடி தலைஎங்கும் பரவ ஆரம்பித்து விட்டது... வீட்டுலே பொண்டாட்டியை கொஞ்சும் போது " முடியெல்லாம் நரைச்சு போனாலும் உனக்கு ஆசை மட்டும் நரைக்கலைய்யானு" அவ வெட்கப் பட்டதை நெனச்சு மெதுவா சிரிச்சிகிட்டான்.

Thursday, September 16, 2010

பாஸ் என்கிற பாஸ்கரன் - எனது பார்வையில்!


ரொம்ப நாளாச்சு இப்படி ஒரு படம் பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சு... கடைசியா எந்த படத்துக்கு இப்படி சிரிச்சேன்னு நினைவில்லை! இந்த படம் வெளியாகும்போது அந்த அளவுக்கு ஆர்வம் இல்லை உடனே பாக்கனும்னு... ஆனா பாசக்கார பய புள்ளைக எல்லாரும் ஒட்டு மொத்தமா நல்லா இருக்குன்னு சொல்லவும் எப்படியாவது பாக்கனும்னு நெனச்சி கடைசியா நேத்துதான் பார்த்தேன்.. படம் முடிஞ்சி வெளியே வந்த பின்னாடிதான் யோசிச்சேன் இந்த படத்தோட கதை என்னன்னு... சத்தியமா ஒன்னும் இல்லை... அதே சமயத்திலே அந்த ஒரு நெனப்பே தியேட்டரிலே படம் பாக்கும்போது வரலை... அது டைரக்டருக்கும், அந்த நகைச்சுவைக்கும் கிடைத்த வெற்றின்னு தான் சொல்லணும்...

Monday, September 13, 2010

திரைக்கு வந்து சில வாரங்களே ஆன படங்கள் - ஒரு பார்வை!!!

தமிழில் நான் மகான் அல்ல படத்திற்கு பிறகு ஒரு முழு விமர்சனம் எழுதும் அளவுக்கு எந்த படமும் என்னை ஈர்க்கவில்லை. ஆதலால் இங்கே சமீபத்தில் வெளியாகி இன்னும் தியேட்டரிலும் தியேட்டரை விட்டும் ஓடிய படங்களை பற்றிய ஒரு சிறு பார்வை... குறு விமர்சனம் ஆகையால் படத்தின் எல்லா விசயத்தையும் பற்றி  எழுத போவதில்லை... பார்த்ததில் எழுத தூண்டியதை பற்றி மட்டும் இங்கே..... ;-) நான் குறிப்பிட்டு இருக்கும் பிளஸ் மற்றும் மைனஸ் ஒரு சாமானிய சினிமா ரசிகனான எனக்கு தோன்றியவை... அவ்வளவே...

Friday, September 10, 2010

இளமைக் காலங்கள் - கபடியும் கலாட்டக்களும் - 2 !!!

ஐய்யா! எல்லாருக்கும் ஒரு விஷயம் தெளிவு படுத்த விரும்புறேன், நான் மேலே சொல்லி இருக்கிற கலாட்டாக்கள் சத்தியமா எந்த வன்முறையையும் குறிக்கவில்லை! நான் பேசப்போறது நாங்கள் சந்தித்த ஜாலியான கலாட்டாக்களை பத்தி மட்டும்தான்! எதுக்காக இந்த விளக்கம் என்றால், நெல்லையிலே சில கபடி மேட்ச்சுகளால நடந்த வன்முறை சம்பவங்கள் அங்கே அந்த விளையாட்டையே தடை செய்ற அளவுக்கு போயிருக்கு...

Friday, September 3, 2010

இளமை காலங்கள் - கபடியும் கலாட்டாக்களும்!!!

"ஒரு ஊருலே ஒரு ராஜா இருந்தான், அவன் ஒரு நாள் ...." அப்படின்னு கோர்வையா சொல்ற கதை இல்லை என்னோட சாரி எங்களோட இளம் பிராயம். இதிலே எங்களோட சொன்னது என்னோட நண்பர்களையும் சேத்துதான், ஏன்னா அவங்க இல்லன்னா இளமையும் இல்லை கலாட்டாவும் இல்லை... எப்போதுமே பிளாஷ்பேக்தான் செம ஹிட்டாவும் வெயிட்டாவும் இருக்கும், சினிமால கூட ! இந்த நிமிஷம் காலபைரவன் வந்து என்ன வேணும்னு கேட்டா, தயவு செஞ்சு கால சக்கரத்தை பின்னோக்கி சுத்தி அந்த டீன்-ஏஜ் பருவத்தை உடனே குடுத்துருன்னு கேப்பேன்... நான் மட்டும் இல்லை நம்ம எல்லோருமே தான் கேப்போம்!

Saturday, August 28, 2010

விளம்பரங்களும் நிதர்சனங்களும்! (18+ மட்டும்)

குடும்பத்தோட படத்துக்கு போகும் போது நல்ல படமா இது, குழந்தைகளோட போயி பார்க்கிற அளவுக்கு தரமானதுதானான்னு நாலு பேர்கிட்ட விசாரிக்கிறோம் அப்படியும் இல்லன்னா இருக்கவே இருக்கு சென்சார் போர்டு செர்டிபிகேட் அதை வச்சு கண்டு பிடிக்கலாம் ( ஓரளவுக்காவது! என்ன நான் சொல்றது.....)

Tuesday, August 24, 2010

நான் மகான் அல்ல - என் பார்வையில்!


வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரனின் இரண்டாவது படைப்பு! அதற்காகவே இந்த படத்தை பார்ப்பது என்று முடிவு, காரணம் அவரது முதல் படம் என்னை கை பிடித்து என் இளமை பருவத்திற்கு அழைத்து சென்றது! கபடி மேட்ச் நடக்கும் போது எல்லோருடைய துணியையும் ஒரு லுங்கியில் பொட்டலமாக வைத்து கொண்டு பின்னாடி நின்னுகிட்டு " அண்ணே! இப்பிடி புடி.. அவனை அப்படி மடக்குனு" மாரி சொல்வானே... அதெல்லாம் அப்படியே எங்க செராக்ஸ். என்ன ஒரு வித்தியாசம் மாரி படத்தோட ஹீரோ அதனால பெரிய கபடி பிளேயர் ஆயிருவான் .. நாங்களும் விளயாண்டோம் ஆனா.... சரி விடுங்க எதுக்கு!!!

Thursday, August 19, 2010

ஜங்ஷன் - டவுன் - தச்சநல்லூர்

இதோ வந்துருவேன் இப்போ வருவேன்னு வானம் போக்கு காட்டி கொண்டிருந்தது; கடைசி டிரெயின் போறதுக்குள்ளே ஸ்டாண்டுக்கு போகணுமே... நேரம் வேற ஆயிருச்சு, அதுவும் போச்சுன்னா அவ்ளோதான்னு நெனசிகிட்டே சர்ரென்று ஆட்டோவை வெரட்டுனான் கதிரு.

Wednesday, August 11, 2010

என் எண்ணத்தை எழுதி என்னத்த! (தலைப்பு வெக்கவே தனியா யோசிக்கணும் போல)


ஏதோ எங்க வீட்டுகாரரும் சந்தைக்கு போனாருன்னு சொல்ற மாதிரி நானும் ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சாச்சு. என்ன எழுதுறதுன்னு யோசிச்சு யோசிச்சு ஏற்கனவே சென்னை தண்ணியிலே கொத்து கொத்தா கொட்டுற முடியை நானும் கூட கொஞ்சம் பிக்க ஆரம்பிச்சிட்டேன். நாட்டுலே எவ்வளவோ விஷயம் இருக்குது ஆனா நம்ம கிட்ட இருக்கா... நம்ம கௌண்டமணி சொல்ற மாதிரி டே நாயே ஊட்டிலே எஸ்டேட் இருக்கு உனக்கு இருக்கா அப்படின்னு எனக்குள்ளே ஒரு கேள்வி. சரி விடு.... கல்லூரி பருவத்திலே கிறுக்குனது ஒண்ணு எடுத்து போட்டுரலாம்னு இதோ போட்டாச்சு.

Tuesday, August 10, 2010

ஆத்தா நான் ஆரம்பிச்சிட்டேன்!!!

ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டு இருந்த விஷயம் இன்னைக்குதான் நடந்திருக்கு. பள்ளி, கல்லூரி பருவத்திலே கிறுக்கு கிறுக்குன்னு கிறுக்கியாச்சு, சரி கொஞ்சம் வலைக்குள்ளேயும் இறங்கலாம்னு ஒரு ஆசை. (எத்தனை பேரு என்னை கொலை வெறியோட தொரத்த போறாங்களோ!)