Saturday, August 28, 2010

விளம்பரங்களும் நிதர்சனங்களும்! (18+ மட்டும்)

குடும்பத்தோட படத்துக்கு போகும் போது நல்ல படமா இது, குழந்தைகளோட போயி பார்க்கிற அளவுக்கு தரமானதுதானான்னு நாலு பேர்கிட்ட விசாரிக்கிறோம் அப்படியும் இல்லன்னா இருக்கவே இருக்கு சென்சார் போர்டு செர்டிபிகேட் அதை வச்சு கண்டு பிடிக்கலாம் ( ஓரளவுக்காவது! என்ன நான் சொல்றது.....)

Tuesday, August 24, 2010

நான் மகான் அல்ல - என் பார்வையில்!


வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரனின் இரண்டாவது படைப்பு! அதற்காகவே இந்த படத்தை பார்ப்பது என்று முடிவு, காரணம் அவரது முதல் படம் என்னை கை பிடித்து என் இளமை பருவத்திற்கு அழைத்து சென்றது! கபடி மேட்ச் நடக்கும் போது எல்லோருடைய துணியையும் ஒரு லுங்கியில் பொட்டலமாக வைத்து கொண்டு பின்னாடி நின்னுகிட்டு " அண்ணே! இப்பிடி புடி.. அவனை அப்படி மடக்குனு" மாரி சொல்வானே... அதெல்லாம் அப்படியே எங்க செராக்ஸ். என்ன ஒரு வித்தியாசம் மாரி படத்தோட ஹீரோ அதனால பெரிய கபடி பிளேயர் ஆயிருவான் .. நாங்களும் விளயாண்டோம் ஆனா.... சரி விடுங்க எதுக்கு!!!

Thursday, August 19, 2010

ஜங்ஷன் - டவுன் - தச்சநல்லூர்

இதோ வந்துருவேன் இப்போ வருவேன்னு வானம் போக்கு காட்டி கொண்டிருந்தது; கடைசி டிரெயின் போறதுக்குள்ளே ஸ்டாண்டுக்கு போகணுமே... நேரம் வேற ஆயிருச்சு, அதுவும் போச்சுன்னா அவ்ளோதான்னு நெனசிகிட்டே சர்ரென்று ஆட்டோவை வெரட்டுனான் கதிரு.

Wednesday, August 11, 2010

என் எண்ணத்தை எழுதி என்னத்த! (தலைப்பு வெக்கவே தனியா யோசிக்கணும் போல)


ஏதோ எங்க வீட்டுகாரரும் சந்தைக்கு போனாருன்னு சொல்ற மாதிரி நானும் ஒரு வலைப்பக்கம் ஆரம்பிச்சாச்சு. என்ன எழுதுறதுன்னு யோசிச்சு யோசிச்சு ஏற்கனவே சென்னை தண்ணியிலே கொத்து கொத்தா கொட்டுற முடியை நானும் கூட கொஞ்சம் பிக்க ஆரம்பிச்சிட்டேன். நாட்டுலே எவ்வளவோ விஷயம் இருக்குது ஆனா நம்ம கிட்ட இருக்கா... நம்ம கௌண்டமணி சொல்ற மாதிரி டே நாயே ஊட்டிலே எஸ்டேட் இருக்கு உனக்கு இருக்கா அப்படின்னு எனக்குள்ளே ஒரு கேள்வி. சரி விடு.... கல்லூரி பருவத்திலே கிறுக்குனது ஒண்ணு எடுத்து போட்டுரலாம்னு இதோ போட்டாச்சு.

Tuesday, August 10, 2010

ஆத்தா நான் ஆரம்பிச்சிட்டேன்!!!

ரொம்ப நாளா நெனச்சிக்கிட்டு இருந்த விஷயம் இன்னைக்குதான் நடந்திருக்கு. பள்ளி, கல்லூரி பருவத்திலே கிறுக்கு கிறுக்குன்னு கிறுக்கியாச்சு, சரி கொஞ்சம் வலைக்குள்ளேயும் இறங்கலாம்னு ஒரு ஆசை. (எத்தனை பேரு என்னை கொலை வெறியோட தொரத்த போறாங்களோ!)