சின்ன வயசுலே இருந்தே அம்மா அடிக்கடி சொல்லுவாங்க... நான் குழந்தையா இருக்கும்போது ரொம்ப அழுதா, பத்ரகாளி படத்திலே வர்ற "கண்ணன் ஒரு கைக்குழந்தை" பாட்டைத்தான் போடுவாங்களாம். அந்த பாட்டை கேட்டா அழுகைய நிறுத்திட்டு சிரிக்க ஆரம்பிச்சிருவேனாம். எதுக்கு இந்த ப்ளாஷ் பேக்னா, நாங்களாம் அப்போ இருந்தே இளையராஜா ரசிகன்னு சொல்லத்தான்... சமீபத்திலே கோடம்பாக்கத்திலே இருக்கிற "சினி சிட்டி" ஹோட்டலுக்கு போயிருந்தோம்அங்கே வார நாட்களில் அதாவது திங்கள்-வெள்ளிக்கிழமைகளில் கரோக்கி நைட்ஸ்! அப்போ சும்மா ஜாலிக்கு ஒரு சில பாடல்களை பாடினேன்.. முக்கியமா இளையராஜாவோட 80 -90 களில் வந்த பாடல்கள்... அந்த மாதிரி பாடல்களை பற்றி ஒரு பதிவு எழுதலாமேன்னு அப்போதான் யோசிச்சேன் ( அந்த ஹோட்டல் நாசமா போக!னு பல பேரு மனசுக்குள்ளே சொல்றது எனக்கு தெளிவா கேக்குது!)